சினிமா
பீட்டர் பால் - வனிதா விஜயகுமார்

பீட்டர் பாலுடன் சமரசமா? - வனிதா விஜயகுமார் விளக்கம்

Published On 2020-11-05 09:19 GMT   |   Update On 2020-11-05 09:19 GMT
மூன்றாவது திருமணம் செய்த பீட்டர் பாலுடன் சமரசம் ஏற்பட்டதாக வந்த செய்திக்கு வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3 வதாக திருமணம் செய்தார். பீட்டர் பாலின் மனைவி இதை எதிர்த்து போலீசில் புகார் அளித்ததால் இது சர்ச்சையானது. பின்னர் பிறந்தநாளை கொண்டாட கோவா சென்றபோது வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். 

பீட்டர் பால் மீது வனிதா பல்வேறு புகார்களை கூறினார். சமீபத்தில் வனிதா மீண்டும் பீட்டர் பாலுடன் இணைய முயன்றதாகவும் ஆனால் அதை பீட்டர் பால் ஏற்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளுக்கு வனிதா விஜயகுமார் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, 

நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்கப்பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இதுபோன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன். இதற்கு முன் நான் என் உறவுகளைச் சரிசெய்ய என்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்திருக்கிறேன், பல அபத்தங்களைப் பொறுத்திருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு பொறுக்க முடியாமல் போனதால்தான் நான் அந்த உறவில் இருந்து வெளியேறினேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியாது. நான் அப்படிப்பட்டவள் கிடையாது. அதனால், தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள்.



உறவு முறிவைப் பற்றி நான் பதிவேற்றிய கடைசி வீடியோவுக்குப் பிறகு நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முதிர்ச்சியடைந்தவர். அவரது முடிவை அவர் எடுத்துவிட்டார். அந்த முடிவோடு என்னால் கண்டிப்பாக வாழ முடியாது. ஆனால், முன்பு சொன்னதுபோல அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள் என் யாருமே அவர் வேண்டாம் என்று சொன்னதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எனவே இப்போது உங்களுக்கு உண்மை தெரியும். நான் முட்டாளாகவும், அப்பாவியாகவும், காதலில் மதிகெட்டும் இருந்ததால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். 

காதலில் என் அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்து ஏற்றுக்கொண்டு விட்டேன். எனது பணி, எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே, இதற்கு மேல் யூகிப்பதை, விவாதிப்பதை நிறுத்துங்கள். அவரோடு எனக்குச் சட்டரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் இப்போது உணர்ச்சியற்றுப் போயிருக்கிறேன். நான் என் வழியில் என் வலியைக் கையாள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News