சினிமா
சுசித்ரா

ஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா?

Published On 2020-10-29 15:36 GMT   |   Update On 2020-10-29 15:36 GMT
பிரபல பின்னணிப் பாடகியும் நடிகையுமான சுசித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அலறியடித்து ஓடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்நிலையில் அவர் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது ஒரு பரபரப்பான செய்தி வைரலாகி வருகிறது. அதாவது பாடகி சுசித்ரா ஹோட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக, கத்திக்கொண்டே வரவேற்பறைக்கு ஓடியதாகவும், அவரது அறை கதவை சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதை பார்த்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. 
Tags:    

Similar News