சினிமா
ராகவா லாரன்ஸ்

பிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

Published On 2020-10-29 19:27 IST   |   Update On 2020-10-29 19:27:00 IST
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமாகி இயக்குநர், நடிகர் என வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். திரைத்துறையைத் தாண்டி இவர் சமூக சேவைகளும் செய்து வருகிறார்.

 ராகவா லாரன்ஸ் அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு ‘ருத்ரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.



‘ருத்ரன்’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ராகவா லாரன்ஸ் - ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும். ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ருத்ரன்’ பட டைட்டில் லுக் வெளியாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Similar News