சினிமா
ஷ்ரத்தா ஸ்ரீநாத்,

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Published On 2020-10-29 12:09 GMT   |   Update On 2020-10-29 12:09 GMT
தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் இணைந்துள்ள படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘புலிமுருகன்’ படத்திற்கு கதை எழுதிய உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார். 

ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் அவர் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 



  மாஸ் என்டர்டெய்னராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கொச்சியில் நடைபெற இருக்கிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான ‘கோஹினூர்’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக விஷாலுடன் ‘சக்ரா’ படத்தில் நடித்து வருகிறார். மாதவனுடன் ‘மாறா’ படத்திலும் நடித்துள்ளார்.
Tags:    

Similar News