சினிமா
மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்
மறைந்த டாக்டரும், நடிகருமான சேதுராமன் கட்டிய மருத்துவமனையை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 36 வயதே ஆன சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சேதுராமன் உயிருடன் இருக்கும் போது ஈ.சி.ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்டி வந்ததாகக் தெரிகிறது. அந்த மருத்துவமனையின் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில், சேதுராமனின் பிறந்ததினமான இன்று அந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
திறப்பு விழாவின் போது சேதுராமனின் ஆளுயர கட் அவுட் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை, சந்தானம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நட்பின் அடையாளமாக மறைந்த தனது நண்பரின் மருத்துவமனையை துவக்கி வைத்த சந்தானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Very happy to launch my Dearest Friend Dr.Sethuraman s ZI CLINIC in ECR on his birth anniversary 😊🙏🏻 @ZI_Clinic#ECRZIClinicpic.twitter.com/OSG0qbKdhI
— Santhanam (@iamsanthanam) October 29, 2020