சினிமா
விஷால்

விஷால் படத்திற்கு வந்த திடீர் சிக்கல்

Published On 2020-09-24 16:43 GMT   |   Update On 2020-09-24 16:43 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடித்துள்ள படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 8.29 கோடி (ரூ.8,29,57,468) ரூபாயை திருப்பித் தருவதாகக் கூறி ரவீந்திரன் உடன் உறுதி அளித்து விஷால் ஒப்பந்தம் செய்துள்ளார். 

ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் ‘சக்ரா’ என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி அத்திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விசாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும், ரூ.8.29 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் ‘சக்ரா’ பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News