சினிமா
மிஷ்கின்

சிம்புவும் இல்ல... அருண்விஜய்யும் இல்ல - மாஸ்டர் பட பிரபலத்துடன் அடுத்த படத்தை தொடங்கிய மிஷ்கின்

Published On 2020-09-20 06:08 GMT   |   Update On 2020-09-20 06:08 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின், அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார். 

இதையடுத்து சிம்பு, அருண்விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மிஷ்கின் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 



மிஷ்கினும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராக்போர்ட் என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News