சினிமா
ஏ.ஆர்.ரகுமான்

வருமான வரித்துறை வழக்கு - ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2020-09-11 07:50 GMT   |   Update On 2020-09-11 07:50 GMT
வருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெளிநாட்டு செல்போன் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இங்கிலாந்தின் லிப்ரா என்ற செல்போன் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது. அந்நிறுவனத்திற்கு இசையமைத்ததற்காக ரூ.3.47 கோடி ஊதியம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் அதற்கு வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது.



ஊதியமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக ஏ.ஆர்.ரகுமான் மீது வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags:    

Similar News