சினிமா
டி.ராஜேந்தர்

தயாரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - ஓ.டி.டி. ரிலீசுக்கு எதிராக டி.ராஜேந்தர் காட்டம்

Published On 2020-09-04 06:13 GMT   |   Update On 2020-09-04 06:13 GMT
தயாரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் ஜூம் செயலி மூலம் நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்றைக்கு வந்திருக்கலாம் ஓ.டி.டி. தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கின்றது. ஓ.டி.டி. தளத்திலே நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள். 



ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? தயாரிப்பாளர்களே சிந்திக்க வேண்டும், ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்களும் இருக்கிறார்கள். ஓ.டி.டி. என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட வினியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிட கூடாது. காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். 8 சதவிகிதம் உள்ளாட்சி வரியினை முற்றிலும் ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைக்கப்படும். 

இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் வினியோக உரிமை சம்பந்தமாக வினியோகஸ்தர்களிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு, அவர் தயாரித்த அந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிடாமலும், வினியோகஸ்தர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்காமலும், அப்படத்தினை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக அப்படத்தினை ஓ.டி.டி. யில் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து வினியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினை திரும்ப பெற்று சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News