சினிமா
ராணா

நயன்தாரா பட இயக்குனருடன் இணையும் ராணா

Published On 2020-09-03 13:32 IST   |   Update On 2020-09-03 13:32:00 IST
நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை இயக்கும் மிலிந்த் ராவ் அடுத்ததாக ராணா நடிக்கும் திரில்லர் படத்தை இயக்க உள்ளாராம்.
சித்தார்த் நடித்த 'அவள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிலிந்த் ராவ். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டுள்ளது. இது பிளைண்டு எனும் கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். 



இந்தப் படத்தை தொடர்ந்து ராணா நடிக்கவுள்ள படத்தை மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அச்சன்டா கோபிநாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது. அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை எடுக்க இருக்கிறாராம் மிலிந்த் ராவ்.

Similar News