சினிமா
நயன்தாரா

ஊரடங்கு நேரத்திலும் நடித்த நயன்தாரா

Published On 2020-07-18 06:58 GMT   |   Update On 2020-07-18 06:58 GMT
முன்னணி நடிகையான நயன்தாரா ஊரடங்கு நேரத்திலும் வீட்டிலிருந்தபடியே நடித்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கினால் நயன்தாரா வீட்டில் இருக்கிறார். அவர் படங்களில் நடித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஊரடங்குக்கு முன்பே ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய மேலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

ஊரடங்கில் அடிக்கடி தனது புகைபடங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். கொரோனாவுடன் இணைத்து வெளியான வதந்திக்கும் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பதிலடி கொடுத்தார்.



தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய நிலையில் தற்போது விளம்பர படமொன்றில் நடித்து இருக்கிறார். வீட்டிலேயே இதன் படப்பிடிப்பை முடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில விளம்பர படங்களில் நடிக்க வைப்பதற்காக முன்னணி நிறுவனங்கள் அவரை அணுக தயாராகி வருகின்றன. 
Tags:    

Similar News