சினிமா
ஜிவி.பிரகாஷ்

நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் அவர்.... இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல்

Published On 2020-05-15 10:43 GMT   |   Update On 2020-05-15 10:43 GMT
நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் தற்போது இல்லை என்று இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கரிடம்  உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 4ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவரது மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்... அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.. நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்' 

இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News