சினிமா
நோ மீன்ஸ் நோ.... வலிமை படக்குழுவுக்கு அன்புக் கட்டளையிட்ட அஜித்
கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித் வலிமை படக்குழுவுக்கு அன்புக்கட்டளை போட்டுள்ளாராம்.
கொரோனா ஊரடங்கால் திரைப்பட தொழில் 52 நாட்கள் முற்றிலுமாக முடங்கியது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தியேட்டர்களை மூடினர். இதனிடையே ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்கு பிந்தைய டப்பிங், ரீ ரிக்கார்டிங், எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க அரசு கடந்த சில தினங்களுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து இந்தியன் 2, மாஸ்டர் போன்ற படங்களின் பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் வலிமை படத்தின் பின்னணி பணிகளும் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வலிமை படத்தின் பணிகள் கொரோனா பிரச்சனைகள் முடிந்து மீண்டும் இயல்புநிலை திரும்பிய பிறகுதான் தொடங்க வேண்டும் என தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத்திடம் ஆஜித் கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமா தொழிலாளர்கள் நலன்கருதி அஜித்தின் அன்பு கட்டளையை போனி கபூரால் மீற முடியவில்லையாம். இதனால் வலிமை பட வேலைகள் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.