சினிமா
பூனம் பாண்டே

ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் கைதானேனா? - பூனம் பாண்டே விளக்கம்

Published On 2020-05-12 12:40 IST   |   Update On 2020-05-12 12:40:00 IST
ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் நடிகை பூனம் பாண்டே கைதானதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கடந்த ஞாயிறன்று தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றதாகவும், ஊரடங்கு சமயத்தில் காரணமின்றி பொதுவெளியில் சுற்றித்திரிந்த காரணத்தால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததாகவும் செய்திகள் பரவின. மேலும் அவரது விலை உயர்ந்த கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: நான் ஞாயிற்றுக்கிழமை இரவு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து மூன்று படங்கள் பார்த்தேன். இந்நிலையில் நான் கைது செய்யப்பட்டதாகக் நினைத்து அன்று இரவில் இருந்து எனக்கு நிறைய நண்பர்கள் போன் செய்து வருகிறார்கள். நானும் அது தொடர்பான செய்திகளை பார்த்தேன். தயவு செய்து என்னை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் வீட்டில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Similar News