சினிமா
விஜய் ரசிகர்கள் பிரியாணி வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய விஜய் ரசிகர்கள்

Published On 2020-05-12 05:21 GMT   |   Update On 2020-05-12 05:21 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பிரியாணி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, இண்டூர் மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் என 250 பேருக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவாக பிரியாணி, முககவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News