சினிமா
ஜோதிகா, சூர்யா

சூர்யா - ஜோதிகாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்

Published On 2020-04-28 10:07 GMT   |   Update On 2020-04-28 10:07 GMT
பொன்மகள் வந்தாள் பட பிரச்சனையில் சூர்யா - ஜோதிகாவுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் களமிறங்கி இருக்கிறார்.
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடி இருப்பதால் இப்படத்தை அமேசான் பிரேமில் வெளியாக திட்டமிட்டுள்ளனர்.

சூர்யாவின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தயாரிப்பாளரான தாணு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.



அதில், பொன்மகள் வந்தாள் படம் மார்ச்சில் ரிலீஸ் ஆகவேண்டிய படம். கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி தானாகவே டிஜிட்டலில் படம் வந்திருக்கும். இப்போது கொரோனாவால் தியேட்டர்கள் இல்லாமல் அந்த வருமானம் இழந்திருக்கிறார்கள்.

அதோடு டிஜிட்டல் ஒப்பந்தம் படி நடந்து கொள்ளாமல் போனால் அந்த தொகையும் வராமல் இழப்பு ஏற்படும். சூர்யா நிறையவே கல்வி உதவி செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தொகையும் பல ஏழைகளுக்கு உதவும்.

டிஜிட்டலில் படம் ரிலீஸ் ஆவதால் சினிமா அழியாது. டிவி வந்தபோது சினிமா அழிந்துவிடும் என்றார்கள் அழிந்ததா முன்பைவிட நன்றாக இருக்கிறது.

பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தடை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியள்ளார்.
Tags:    

Similar News