சினிமா
விஜயகாந்த், சேரன்

வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன் - சேரன் புகழாரம்

Published On 2020-04-22 05:48 GMT   |   Update On 2020-04-22 05:59 GMT
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளித்த விஜயகாந்த்தின் மனிதநேயமிக்க செயலை இயக்குனர் சேரன் பாராட்டி உள்ளார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மருத்துவரின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு, ஓட்டுனரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையறிந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தனக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தார்.  

அவரின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான சேரன் இதுகுறித்து கூறியதாவது: வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலை பாராட்ட.. வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள்.. கொரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்.. என கூறியுள்ளார்.
Tags:    

Similar News