சினிமா
பெப்சி மற்றும் தலைவி பட குழுவினருக்கு உதவிய கங்கனா ரணாவத்
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் பெப்சி மற்றும் தலைவி படக்குழுவினருக்கு நிதியுதவி வழங்கி உள்ளார்.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை கங்கனா நிதி உதவி அளித்துள்ளார். பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சமும், தலைவி படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார்.
நயன்தாரா, காஜல் தவிர தமிழில் பல படங்களில் நடித்த நடிகைகள் பலரும் உதவாத நிலையில் நடிகை கங்கனாவின் இந்த உதவி தொழிலாளர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
நயன்தாரா, காஜல் தவிர தமிழில் பல படங்களில் நடித்த நடிகைகள் பலரும் உதவாத நிலையில் நடிகை கங்கனாவின் இந்த உதவி தொழிலாளர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.