சினிமா
மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்
மனித நேயத்தை காப்போம் என்று நடிகர் விவேக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விவேக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மருத்துவர் ஒருவர் இறந்தால் கூட போலீஸ் பாதுகாப்போட அடக்கம் செய்ய வேண்டிய நிலை இன்னைக்கு இருக்கு. கோவிட் 19 நோய் தொற்று உள்ளவங்களுக்கு சிகிச்சை அளித்து, அதனால அவர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கார். அவர் உடலை அடக்கம் பண்ண மக்கள் தகராறு பண்றாங்க. ஏன்னா, தொற்று பரவிரும்னு பயப்படறாங்க. சில மருத்துவ உண்மைகள் புரியலைன்னு நினைக்கிறேன்.
கொரோனா வைரஸ் இறந்த உடல்ல இருக்காது. அதனால் எரித்தாலும் புதைத்தாலும் எந்த ஆபத்துமில்லை. பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் இப்ப நடமாடும் தெய்வங்கள். அவர் இருக்கும்போது கொண்டாட முடியலைன்னாலும் இறந்த பிறகாவது அவரை அவமானப்படுத்தாம இருக்கணும். மனித நேயத்தை காப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.