சினிமா
நடிகை ரகுல்பிரீத் சிங்

தம்பி செய்த காரியத்தால் வருத்தத்தில் இருக்கும் ரகுல் பிரீத் சிங்

Published On 2020-04-20 13:47 GMT   |   Update On 2020-04-20 13:47 GMT
தன்னுடைய தம்பி செய்த காரியத்தால் தற்போது வருத்தத்தில் இருப்பதாக நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்
தன்னுடைய தம்பியால்தான் இப்போதும் நான் சிங்கிளாக இருக்கிறேன் என்றார், ரகுல் பிரீத் சிங். இதுகுறித்து அவர் கூறும்போது, நான்பள்ளியில் படிக்கும் போது, எனது தம்பி அமனும் அதே பள்ளியில்தான் படித்தான். அப்போது யாரோ ஒரு பையனிடம் பேசினேன் என்றால், உடனே வீட்டில் சென்று அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுவான்.

நட்புக்கு கூட எந்த பையனுடனும் பேச விட மாட்டான். ஒருமுறை பள்ளியில் நானும், இரண்டு மாணவிகளும் நின்று ஒரு பையனுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது என் கையில் ஸ்நாக்ஸ் இருந்தது. அதை பார்த்துவிட்ட தம்பி, பெற்றோரிடம், " ரகுல் ஒரு பையனுக்கு ஸ்நாக்ஸ் ஊட்டி விட்டு கொண்டிருந்தாள் ' என்று சொல்லிவிட்டான். என் தம்பியின் இதுபோன்ற செயல்களால்தான் நான் யார் காதல் வலையிலும் விழவில்லை. காதல் என்றால் ஒதுங்கிவிடுகிறேன் ' என்றார்.
Tags:    

Similar News