சினிமா
கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்த சசிகுமார்

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படித்தான்.... போலீசுக்காக களமிறங்கிய சசிகுமார்

Published On 2020-04-19 08:30 GMT   |   Update On 2020-04-19 08:30 GMT
திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிகுமார், மதுரை மாநகர போலீசாருடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மதுரை மாநகரில் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

மதுரை மாநகர போலீசாரும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒலிபெருக்கிகள், எல்.இ.டி. திரை பொருத்திய வாகனங்கள், ஆட்டோவில் பிரசாரம் ஆகியவை மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்பிணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நடிகரும், தன்னார்வலருமான சசிகுமார், தெப்பக்குளம் பகுதியில் போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சாலையில் நின்று இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவர்களிடம் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருங்கள், அனாவசியமாக வெளியே சுற்றாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். 

மேலும் அவர் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று பொதுமக்களுக்காக போலீசார் சிரமத்துடன் பணிபுரிகிறார்கள் என்பதையும் விளக்கினார். இதுகுறித்த வீடியோ காட்சிகளை நடிகர் சசிகுமார் தயார் செய்து மதுரை மாநகர போலீசாருக்கு வழங்கியுள்ளார். 3 நிமிடம் ஓடும் இந்த வீடியோ காட்சி மதுரை மாநகர போலீஸ் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வர வேற்பு கிடைத்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகநூல் பயனாளிகள் அந்த வீடியோ காட்சியை பார்த்தனர்.
Tags:    

Similar News