சினிமா
அஜாஸ் கான்

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பிரபல நடிகர் கைது

Published On 2020-04-19 11:30 IST   |   Update On 2020-04-19 11:30:00 IST
முகநூலில் இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பிரபல நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்- 7 போட்டியாளரும் ஆவார். தமிழில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தில் நடித்து இருந்தார். இந்தநிலையில் அஜாஸ் கான் முகநூலில் இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகர் அஜாஸ் கானை கைது செய்து உள்ளனர். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர போதை பொருள் வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News