சினிமா
சிவகார்த்திகேயன்

நிறைய பேருக்கு சீரியஸ்னஸ் தெரியல - சிவகார்த்திகேயன்

Published On 2020-03-24 16:18 GMT   |   Update On 2020-03-24 16:18 GMT
கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், நிறைய பேருக்கு அதன் சீரியஸ்னஸ் தெரியல என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பலர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், நிறைய பேருக்கு சீரியஸ்னஸ் தெரியவில்லை. யாரும் வெளியில் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் மருத்துவர்கள், காவல்துறையினர், ஊடகங்கள், மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News