சினிமா
சிவகார்த்திகேயன்

பெப்சி ஊழியர்களுக்கு சிவகார்த்திகேயன் நிதியுதவி

Published On 2020-03-23 16:01 GMT   |   Update On 2020-03-23 16:01 GMT
பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.



நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் சில சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News