சினிமா
போஸ்கோ பிரபு, சிவகார்த்திகேயன்

நீதிமன்ற தடையை மீறி சிவகார்த்திகேயன் படம் வெளியிடப்படுவதாக இயக்குனர் குற்றச்சாட்டு

Published On 2020-03-19 09:50 GMT   |   Update On 2020-03-19 09:50 GMT
நீதிமன்ற தடையை மீறி சிவகார்த்திகேயன் படம் வெளியிடப்படுவதாக இயக்குனர் போஸ்கோ பிரபு குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஹீரோ’. மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் தயாரித்திருந்தார். ஹீரோ பட கதைத் திருட்டு சம்பந்தமாக இயக்குனர் போஸ்கோ பிரபு அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, வேறு மொழிகளில் வெளியிட இடைக்காலத்தடை விதித்தும். மொழிமாற்றம் [டப்பிங்] மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 



ஆனால், தடையையும் மீறி தெலுங்கில் சக்தி என்ற பெயரில் ஹீரோ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற மார்ச் 20-ம் தேதி தெலுங்குத் திரையுலகில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. 

”ஹீரோ” திரைப்படம் வெளியாவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ள நிலையில், திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என இயக்குனர் போஸ்கோ பிரபு குற்றம் சாட்டியுள்ளார். 
Tags:    

Similar News