சினிமா
சி.எஸ்.அமுதன்

கொரோனாவை தவிர்க்க வீட்டுலயே சில் பண்ணு மாப்பி - சி.எஸ்.அமுதன்

Published On 2020-03-18 14:52 IST   |   Update On 2020-03-18 14:52:00 IST
சிவா நடிப்பில் வெளியான தமிழ்படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன், வீட்டுலயே சில் பண்ணு மாப்பி என கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. கொரோனாவால் நாடு முழுக்க திரைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் கூறி வருகின்றனர்.



அந்த வகையில், தமிழ்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இது நம்ம வலிமைய காட்ற நேரமில்ல. இப்ப இல்லனா எப்பவும் இல்லன்றத உணரனும். நம்ம ஆபீஸ்ல, போயி வேல இருந்தா பாருங்கடானு சொன்னாலும் அதயெல்லாம் பொருட்படுத்தாம நம்மள சார்ந்தோருக்கு மத்தவங்க இரங்கல் தெரிவிக்கிற நிலம வந்துடாம இருக்க, வீட்டுலயே கொஞ்சம் சில் பண்ணு மாப்பி”. என கூறியுள்ளார்.

Similar News