சினிமா
ஷங்கர்

இயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்

Published On 2020-03-18 03:09 GMT   |   Update On 2020-03-18 03:09 GMT
விபத்து நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என இயக்குனர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 என்ற திரைப்படம் தயாரிப்பில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்தது. பெரிய அளவில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 

படப்பிடிப்பின்போது, ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள். இந்த விபத்து தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இந்த வழக்கில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோரிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.



இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் உள்ளிட்ட 24 பேரை விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட மற்றவர்கள் இன்று விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விபத்து எவ்வாறு நடந்தது? என்று துணை கமிஷனர் நாகஜோதி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
Tags:    

Similar News