சினிமா
விஜய் சேதுபதி

அவுங்ககிட்ட மட்டும் ஜாக்கிரதையா இருங்க - விஜய் சேதுபதி அசத்தல் பேச்சு

Published On 2020-03-16 07:03 GMT   |   Update On 2020-03-16 07:03 GMT
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, அவுங்கட்ட மட்டும் ஜாக்கிரதையா இருங்க என கூறினார்.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: விஜய் சார் மீது எனக்கு இருக்கிற காதல் அவருக்கு நான் கொடுத்த முத்தத்திலேயே அவருக்கு தெரியும். மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது மாதிரியான தருணத்தில் உறவினர்களே நம்மைத் தொடுவதற்கு யோசிக்கும்போது நம்மைத் தொட்டு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மதத்தை சொல்லி மனிதர்களை பிரிக்கிறார்கள். கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான மகத்தான மனிதரை கடவுள் இன்னும் படைக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவில் எந்த மதமும் கிடையாது.



தன்னுடைய மதத்தில் கூறியிருப்பதைப் பகிராமல் அனைவரிடமும் மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் பகிருங்கள். இந்த உலகம் மனிதர் வாழ்வதற்கானது. எனவே, அன்பைப் பகிர்ந்து சகோதரத்துவத்துடன் இருப்போம். விஜய குருநாத சேதுபதி காளிமுத்து இது தான் எங்க அப்பா வைத்த பெயர். வாழ்க்கைல எப்பவுமே என் அப்பா தான் மாஸ்டர். சினிமாவுல நான் சந்திக்கிற அத்தனை மனிதர்களுமே மாஸ்டர் தான்’.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News