சினிமா
பார்த்திபன்

ஒத்த செருப்பு 2 உருவாகுமா? - பார்த்திபன் பதில்

Published On 2020-03-01 10:20 GMT   |   Update On 2020-03-01 10:20 GMT
ஒத்த செருப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறது. புது முயற்சியாக இப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்தை கோலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். இப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. 



வழக்கமாக சினிமாவில், ஒரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றால், அதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழும், அந்த வகையில், ஒத்த செருப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர் ஒருவர் பார்த்திபனிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு தனது ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன், ‘நான் ever ready... தயாரிக்க எவர் ready?' என பதிலளித்துள்ளார்.
Tags:    

Similar News