சினிமா
கீர்த்தி - சாந்தனு

இரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் - சாந்தனு

Published On 2020-02-16 10:10 GMT   |   Update On 2020-02-16 10:10 GMT
பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சாந்தனு, இருவரும் இரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் என்று கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கிறார். இவரும், டி.வி. தொகுப்பாளர் கீர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து சாந்தனு அளித்துள்ள பேட்டியில், நாங்கள் பல தடவை காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டோம். பள்ளியில் காதல், கல்லூரியில் காதல் என கடைசியில் திருமணத்தில் முடிந்தது.



இரண்டு முறை பிரேக் அப் செய்து கொண்டோம், அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள் வரை பேசாமல் இருந்தோம். விஜய்யிடம் என்னை பொறுக்கி என்றே கீர்த்தி சொல்லி இருக்கிறார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் எனக்காக அவருக்கு பிடிக்காத விசயங்களை கூட செய்கிறார். நிறைய மாற்றங்கள் இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் கீர்த்தி பேசுகையில், இவரும் எனக்காக நிறைய செய்திருக்கிறார், வீட்டு வேலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி, கணவன் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News