சினிமா
பிரபுதேவா

சைக்கோ கதையில் பிரபுதேவா

Published On 2020-02-16 09:22 GMT   |   Update On 2020-02-16 09:24 GMT
நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, அடுத்ததாக சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட புதிய படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார். காதலர் தினத்தன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரபுதேவாவின் நெற்றியில் மூன்றாவது கண் இருப்பது போல் தோற்றம் அமைந்துள்ளது. 



இந்த படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், பிரபுதேவா குலேபகாவலி படத்தில் நடிக்கும் போதே இந்த கதையை சொன்னேன். அதன் பிறகு பாலிவுட் படங்களை இயக்க சென்றுவிட்டார். அந்த படங்களை முடித்த கையோடு வந்து பஹிரா படத்தில் நடித்து கொடுத்தார். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இது ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம். இதுவரை பார்த்திராத பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம் என கூறினார்.
Tags:    

Similar News