சினிமா
சுந்தர்.சி

அரண்மனை 3-ல் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

Published On 2020-02-16 08:00 GMT   |   Update On 2020-02-16 08:00 GMT
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. 



இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், ஆண்ட்ரியாவும் நடிக்க உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான சாக்‌ஷி அகர்வால், அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News