சினிமா
ராதாரவி, சின்மயி

மன்னிப்பு கேட்க முடியாது - ராதாரவிக்கு சின்மயி பதிலடி

Published On 2020-02-16 06:05 GMT   |   Update On 2020-02-16 06:05 GMT
டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ராதாரவி தலைவராக இருந்து வருகிறார். சங்க நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் முடிவதால் விருகம்பாக்கத்தில் உள்ள திருமன மண்டபத்தில் தேர்தல் நடந்தது. ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.



தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்து பேட்டியளித்த ராதாரவி ‘சின்மயி மன்னிப்பு கேட்டால் டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்வோம்’ என்று கூறினார். ராதாரவியின் இந்த கருத்துக்கு சின்மயி ‘ராதாரவி காலில் விழுந்தோ அல்லது வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை எதிர்கொள்வேன்’ என்று கூறினார்.
Tags:    

Similar News