சினிமா
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய்பல்லவி, போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமானவர் விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து தனுசுடன் ‘மாரி 2’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி சாதனை படைத்தது.
இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள, 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை சாய் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை. வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இந்த வருட பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பெண்களில் இவரும் ஒருவர்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தன்னைப் பெருமைப்படுத்திய போர்ப்ஸ் இதழுக்கு நன்றி தெரிவித்துள்ளார், நடிகை சாய் பல்லவி. இதுபற்றி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர், இதன்மூலம் தான் பெருமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.2 கோடி மதிப்புள்ள முக அழகு கிரீம் விளம்பர ஒப்பந்தத்தையும் ரூ.1 கோடி மதிப்புள்ள மற்றொரு ஒப்பந்தத்தையும் நடிகை சாய் பல்லவி நிராகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது, நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விரத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.