சினிமா
ஏ.ஆர்.ரகுமான்

நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்

Published On 2020-02-05 05:25 GMT   |   Update On 2020-02-05 05:25 GMT
தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தியுள்ளார்.
நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 



இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 463-வது கந்தூரி மகோற்சவ விழாவையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். இவருடன் இவரது மகனும் விழாவில் கலந்துக் கொண்டார். இவர்கள் கலந்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News