சினிமா
ஏ.ஆர்.ரகுமான்

பொன்னியின் செல்வன் மேக்கிங் பிரமிப்படைய வைத்தது - ஏ.ஆர்.ரகுமான்

Published On 2020-01-28 03:10 GMT   |   Update On 2020-01-28 03:57 GMT
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மேக்கிங் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்ததாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.



ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நிறைவடைந்த நிலையில், படம் குறித்த ருசீகர தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் தம்மிடம் காட்டியதாகவும், அந்த புகைப்படங்கள் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News