சினிமா
பதக்கம் வென்றவர்களுடன் சுசீந்திரன்

தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்களை பாராட்டிய சுசீந்திரன்

Published On 2019-12-18 15:57 GMT   |   Update On 2019-12-18 15:57 GMT
மலேசியாவில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்களை இயக்குனர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.
21-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் 28 நாடுகளில் இருந்து 2117 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 85 பேர் கலந்துக் கொண்டனர். சென்னையில் இருந்து 24 பெண்கள், 15 ஆண்கள் என 39 பேர் கலந்துக் கொண்டனர்.

சென்னையை சேர்ந்த மூத்த தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு 10 தங்கம் உள்பட மொத்தம் 38 பதக்கங்கள் கிடைத்தது. பிரமீளா (நீளம் தாண்டுதல்), சாந்தி (சங்கிலி குண்டு எறிதல்) ஆகியோர் புதிய சாதனை படைத்தனர்.



பதக்கம் வென்றவர்களுக்கு சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. தலைவர் சென்பகமூர்த்தி, டைரக்டர் சுசீந்திரன் உள்ளிட்டோர் பதக்கம் பெற்றவர்களை பாராட்டினர்.
Tags:    

Similar News