சினிமா
சாமிதோப்பு அய்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா
நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமைபதிக்கு சென்று சாமிதரிசனம் செய்துள்ளார்.
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நயன்தாராவும், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் குமரியில் தங்கியிருந்து, அம்மாவட்டத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமைபதிக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். சாமிதோப்பு பதிக்கு செல்லும் பக்தர்கள் சுருள்வைத்து வழிபடுவார்கள். அதன்படி நயன்தாராவும் சுருள்வைத்து வழிபட்டார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் சாமி கும்பிட்ட நயன்தாரா, திருஏடு வாசிப்பிலும் கலந்துகொண்டார். நயன்தாராவுக்கு சாமிதோப்பு தலைமைபதி நிர்வாகி பால ஜனாதிபதி, திருநாமமிட்டு இனிமம் வழங்கினார்.
நயன்தாரா சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது அவரை செல்போனில் பலரும் போட்டோ எடுத்தனர். நயன்தாராவுடன் சேர்ந்து போட்டோ எடுக்க முயன்றபோது பாது காவலர்கள் பொதுமக்களை தடுத்து நயன்தாராவை அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர். அவரும் பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி அங்கிருந்து சென்றார்.