சினிமா
ரஜினிகாந்த், யோகிபாபு

யோகிபாபுவுக்காக காத்திருந்த ரஜினி

Published On 2019-12-16 13:51 GMT   |   Update On 2019-12-16 13:51 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் யோகிபாபுவுக்காக ரஜினிகாந்த் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. 



இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் ஷூட்டிங், சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெற்றனர். யோகிபாபு பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அவருக்காக காத்திருந்து ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. 'யோகிபாபு வரும்போது ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளலாம்' என்று ரஜினி சொல்லி இருக்கிறார்.  ரஜினியின் பெருந்தன்மையை பார்த்து யோகி பாபு வியந்து இருக்கிறார். தர்பார் படம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.
Tags:    

Similar News