சினிமா
சாக்‌ஷி அகர்வால்

ஆக்‌ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் சாக்‌ஷி

Published On 2019-12-16 11:22 GMT   |   Update On 2019-12-16 11:22 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான சாக்‌ஷி அகர்வால், தற்போது புதிய படம் ஒன்றில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
காலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். "களிறு" என்ற படத்தை இயக்கிய ஜி ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்‌ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். 

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், படத்தை பற்றி இயக்குனர் ஜி ஜெ சத்யா கூறியதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப்பட செய்தார் என்றால் மிகை ஆகாது.  அந்த மன உறுதியும், திடமும் என் கதையின் நாயகி அவரே என தீர்மானிக்க உதவியது. 



அவரை அணுகிய போது சற்றே தயங்கினாலும் பின்னர் முழு மனதுடன் ஒப்புக்கு கொண்டார். நாயகியின் பாத்திர தன்மைக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப்பட்டு தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார். இந்த அர்ப்பணிப்பு இவரை மென்மேலும் உயர்த்தும் என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை. விரைவில் மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரங்களையும் வெளியிடுவோம்" என்றார்.
Tags:    

Similar News