சினிமா
அனிருத்

தர்பாரில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்

Published On 2019-12-05 08:15 GMT   |   Update On 2019-12-05 08:17 GMT
அனிருத் இசையமைத்து வரும் தர்பார் படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூவர் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’.  இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 



இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூன்று பேர் பாடியுள்ளனர். படத்தில் இந்த பாடலுக்கு திருநங்கைகள் நடனமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இவர்கள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் எனும் இசை குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News