சினிமா
ரஜினியுடன் நடிக்கும் கனவு நிறைவேறியது - சூரி
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் சூரி நடிக்க இருப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் கமர்சியலான குடும்ப கதையாக உருவாகும் இந்த படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் சூரி காமெடி வேடத்தில் நடிக்கிறார். ரஜினியுடன் நடிப்பது பற்றி சூரி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
“காலையில் இயக்குநர் இரா.சரவணன் படம் நல்லபடியாக தொடங்கியிருக்கு. மாலையில் ரஜினி-சிவா இணையும் படத்தின் அறிவிப்பு. இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கேன்.
சூப்பர் ஸ்டார் படத்தில் லைட் பிடித்துவிட மாட்டோமா என்று லைட்மேன் நினைப்பார். இப்படி அனைவருடைய கனவு மாதிரிதான் என்னுடைய கனவும் இருந்தது. எப்படியாவது ரஜினி சாரோடு ஒரு படம் நடிச்சுடணும்னு நினைச்சுட்டே இருந்தேன். என்றைக்காவது ஒரு நாள் போன் வந்திடாதா என்று ஏங்கியிருக்கேன்.
அந்த அழைப்பு இயக்குநர் சிவா கிட்ட இருந்து வந்துச்சு. எனக்கோ இரட்டிப்பு சந்தோஷம். ஏன்னா ரஜினி படம் மட்டுமல்ல, எனக்குப் பிடிச்ச இயக்குநர் சிவா படமும் கூட அவ்வளவு சந்தோஷம்.
இப்படி அனைத்துமே ஒரே படத்துல அமையுறது கஷ்டம். எனக்கு அமைஞ்சுருக்கு என்றால் எவ்வளவு கொடுத்து வைச்சுருக்கேன்னு பாருங்க. ரஜினி சார் படத்துல நடிக்கப் போறேன்னு வீட்டுல ரொம்ப காட்டிக்கல. இப்போ தானே வந்துருக்கு. இனிமேல் தான் சொல்லணும். ஏன்னா 2 நாளுக்கு முன்னாடி தான் சைன் பண்ணினேன். ரொம்ப சந்தோஷம் அண்ணே” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.