சினிமா
படக்குழுவினர்

பூஜையுடன் தொடங்கியது சசிகுமார் - ஜோதிகா நடிக்கும் புதிய படம்

Published On 2019-11-28 10:31 GMT   |   Update On 2019-11-28 10:31 GMT
சூர்யா தயாரிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.
சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, சூரி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது.



இவ்விழாவில் நடிகர் சிவகுமார், 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர், இயக்குனர்கள் இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், கௌதமராஜ், ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News