சினிமா
நிம்மி

இயக்குனரை சந்தேகப்பட்ட புதுமுக நடிகை நிம்மி

Published On 2019-11-21 08:44 GMT   |   Update On 2019-11-21 08:44 GMT
மேகி என்ற படத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை நிம்மி, படத்தின் இயக்குனர் கார்த்திகேயன் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டிருக்கிறார்.
'மேகி' என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நிம்மி, திரையில் தான் அறிமுகமான அனுபவம் பற்றிப் பேசுகிறார்:

'மேகி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு பேஸ்புக் மூலம் தான் கிடைத்தது. என்னுடைய டப்மாஷ் பார்த்து விட்டு என்னை அழைத்தார்கள். இயக்குனர், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சாரைப் போய்ப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. உடனே முடிவை சொல்ல சொன்னார்கள்.

யோசிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றேன். அவசரம் என்றார்கள். சிந்திக்க இரண்டு நாள் வேண்டும் என்றேன். ஏனென்றால் சினிமாவில் போலிகள் அதிகம். யார் படம் எடுப்பவர்கள்? யார் எடுக்க முடியாதவர்கள்? என்று கணிப்பது கடினம். அதனால் என் மனம் நம்ப மறுத்தது. ஆனால் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு என்றார்கள் அதையும் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வழியாகச் சம்மதித்து படப்பிடிப்புக்குச் சென்று விட்டேன். படப்பிடிப்புக்குச் சென்ற முதல் நாளே நான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? இந்த படத்தை எடுத்து முடித்து வெளியிடுவீர்களா? என்று கேட்டேன்.



நான் அறியாமையில் அப்போது கேட்டிருந்தாலும் அப்படி நான் கேட்டிருக்க கூடாது தான். இந்த கேள்வி அவரை அதிர்ச்சியூட்டியிருக்க வேண்டும். ஆனாலும் அவர் அதை எதிர்கொண்டு விரைவில் வெளியிடுவோம் என்று தேதி சொன்னார். அதன்படி அடுத்தடுத்த வேலைகள் நடக்க ஆரம்பித்தன. எனக்கு நம்பிக்கை துளிர்த்தது. மேகி ஒரு பேய்ப் படம் என்றாலும் அனைவரும் பார்க்கும்படியாக இருக்கும். விறுவிறுப்பு, காமெடி, திகில் எல்லாம் கலந்த ஒன்றாக இருக்கும்.

இந்த நேரத்தில் முதல் படத்திலேயே இவ்வளவு விரைவாக படத்தை எடுத்து இவ்வளவு விரைவாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கும் இயக்குநருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இப்போது அந்தக் கேள்வி கேட்டதை நினைத்து வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. ஏனென்றால் சினிமாவில் சொன்னதைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி என்னை உணர வைத்த அனுபவம் தான் மேகி படம் ." இவ்வாறு நடிகை நிம்மி கூறினார்.
Tags:    

Similar News