சினிமா
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி
கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
அந்த வகையில் ஒரு பிரபல துணி விற்பனை மால்கள் வைத்துள்ள நிறுவனம் சாய் பல்லவியை தங்கள் விளம்பரத்தில் நடிக்கவைக்க பேசியுள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரவும் தயார் எனவும் கூறியுள்ளனர். ஆனால் சாய் பல்லவி மறுத்துவிட்டார்.