சினிமா
அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஆலியா பட்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாயகியாக ஆலியா பட் நடித்து வருகிறார். 'என் திரையுலக வாழ்க்கையில், இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கப் போகிறது. இந்த படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்' என, பெருமிதத்துடன் கூறுகிறார்.
இவர், இதுவரை நடித்த வேடங்கள் எதுவும், ரசிகர்களிடம் பெரிய பாராட்டு எதையும் பெறவில்லை. இதனால், சவாலான வேடத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு, அதற்கு ஏற்ற மாதிரி, ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கும் இந்த படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கியுள்ளார், ஆலியா.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், ஆந்திராவில் நடந்த சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, இந்த படத்துக்கு ராஜமவுலி கதைக்களம் அமைத்துள்ளார்.