சினிமா
ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் - விஜய் சேதுபதி
சென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சி கலந்துக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்’ என்னும் `கமல் 60’ நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பிரபு, வடிவேலு, விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு என திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விஜய் சேதுபதி பேசும் போது, ‘மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரே மிகவும் பிடித்துள்ளது. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். எல்லோரும் இணைந்து இருப்போம் என்பதையே அவரது கட்சியின் சின்னம் சொல்வதாக நான் உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படி ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கிறாரோ அதே போல அரசியலிலும் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்’ என்றார்.