சினிமா
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லதா மங்கேஸ்கர்

லதா மங்கேஸ்கர் பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்

Published On 2019-11-18 09:12 GMT   |   Update On 2019-11-18 09:12 GMT
பின்னணி பாடகி லதா மங்கேஸ்கரின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஸ்கருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த 11-ந்தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

இந்த நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:- இசைத்துறையில் சாதனை படைத்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்த வதந்திகள் முழுவதும் தவறு. அந்த செய்திகள் அனைத்தும் கொடுமையாக உள்ளன. சரியான விவரம் அறியாதவர்கள். தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.



நான் தனிப்பட்ட முறையில் அவரது உடல்நலம் குறித்து அறிந்து கொண்டேன். அவர் உடல்நிலை தேறி வருகிறார். விரைவில் நலம் அடைவார். அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். யாரோ, தங்களது வலைதள பக்கங்களில் பதிவு செய்கிறார்கள் என்பதற்காக அதை பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News