சினிமா
சுந்தர் சி இயக்கிய ஆக்ஷன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில், அவரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் திகில் திரைப்படம் `இருட்டு'. திகில் கலந்த காமெடி படமான `அரண்மனை' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த மாதம் ரிலீசாக இருந்தது. சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 6-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல் கதிர், யோகிபாபு நடித்துள்ள ஜடா படமும் அதேநாளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.