சினிமா
விவசாயிகளுடன் விஜய் ரசிகர்கள்

விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்

Published On 2019-11-17 09:27 GMT   |   Update On 2019-11-17 09:27 GMT
பேனர் வைப்பதற்கு பதிலாக தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 2 விவசாயிகளின் கடனை விஜய் ரசிகர்கள் அடைத்தனர்.
நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்பட வெளியீட்டின் போது ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டுமென விஜய் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் திரைப்பட வெளியீட்டுக்கு பேனர் வைப்பது தவிர்க்கப்பட்டு சமூக சேவை பணியில் இறங்கினர். இதில் பேனர் வைப்பதற்கான நிதியினை கொண்டு மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் விவசாயிகளின் வங்கி கடனை அடைக்க தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவு செய்தனர். 

இவற்றில் தேனி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த முனியாண்டி என்ற விவசாயி கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற வங்கி கடன் ரூ.49,960 மற்றும் பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயி ஜெயமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற வங்கி கடன் ரூ.46 ஆயிரம் ஆகிய 2 விவசாயிகளின் வங்கி கடன் அடைக்க நிதி உதவி வழங்கப்பட்டது.



இந்த விவசாயிகளுக்கு கடன் அடைக்க நிதிஉதவி அளிக்கும் நிகழ்ச்சி தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் லெப்டு பாண்டி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு வங்கி கடனை அடைப்பதற்கான நிதியினை வழங்கினார்.
Tags:    

Similar News